படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகரில் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விபத்துகள் அரங்கேறுவதற்கு முன்பாக பள்ளி நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாநகரில் ஆர் சி மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா ஆண்கள் மாடல் பள்ளி, நிர்மலா பெண்கள் பள்ளி என ஏராளமான அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு மதுரை மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பேருந்தில் வந்து படித்துவிட்டு தினசரி வீடு திரும்புகின்றனர்.

இலவச பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

கதவுகள் இல்லாத அரசுப்பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வப்போது விழுந்து காயம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது. மதுரை மாநகரில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமெனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிக்குக் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதாலே ஆபத்து எனத் தெரிந்தும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயணிப்பதால் மற்ற பணிகளுக்காகப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நடைபெற்ற பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதலும், இழப்பீடும் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Dangerous journey on stairs: Request to run additional buses for studentsபடிக்கட்டுகளில் அபாய பயணம்மதுரை மாநகரில் ஆர் சி மேல்நிலைப்பள்ளி
Share
Tweet
SendShare
Previous Post

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

Next Post

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies