தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Nov 15, 2025, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Aug 9, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சுதந்திர வாரம் கொண்டாடத் தொடங்கிய நிலையில், தேசப் பிரிவினையால் பஞ்சாப்,சிந்து, வங்காளம்,பலுசிஸ்தான்,காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இந்துக்கள் படுகொலைகள் அரங்கேறின.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காந்தி வருகிறார் என்ற செய்தி வந்தவுடன், கொல்கத்தாவுக்கு வடக்கே உள்ள அமைந்துள்ள ஜோடேபூர் ஆசிரமம் பரபரப்பாக இருந்தது.  ஆசிரமத்துக்கு வந்த காந்தி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி,வங்காளத்தில், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முஸ்லீம்களுக்கு எந்த ஒடுக்கு முறையும் இல்லை என்பதை உறுதி செய்யவே நவகாளிக்குச் செல்லப் போவதாக அறிவித்தார்.

அதே நேரம் மந்திர் மார்க்கில் அமைந்துள்ள இந்து மகாசபா பவனும் பரபரப்பாக இருந்தது.  விநாயக தாமோதர சாவர்க்கர் தலைமையில் இந்து மகா சபையின் மத்தியக் குழுக் கூட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முஸ்லீம்களைத் தாஜா செய்யும் காங்கிரஸ் கொள்கையை எதிர்த்து, காங்கிரசை விட்டு விலகிய பண்டிட் சந்திர சர்மாவும் டாக்டர் கரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து மக்களுக்கும் பிளவுபட்ட இந்துஸ்தானத்தில் சம உரிமை கிடைக்கும் நிலையில்,பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் எனவே, இந்துஸ்தானத்தில் தங்கியிருக்க விரும்பும் முஸ்லீம்களுக்கு சம உரிமை கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டது.

இந்தி மொழி பேசாத மாகாணங்களில்,கல்வி, ஊடகம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளுர் மொழிகளில் இருக்கும் என்றும், தேசிய மொழியாக இந்தி,நிர்வாக மற்றும் நீதி அமைப்பில் ஏற்றுக் கொள்ளப் படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும்,அனைத்து குடி மக்களுக்கும் ராணுவப் பயிற்சி உட்பட பல கோரிக்கைகளும் இக் கூட்டத்தில் வைக்கப் பட்டன.

இதேநேரம் கராச்சியில் தனது பங்களாவில், புதிய இஸ்லாமிய நாட்டுக்கான தேசிய கீதமாக எதை வைப்பது என்ற சிந்தனையில் ஜின்னா இருந்தார். அவருக்கு ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞர் நினைவுக்கு வந்தார்.

லாகூரைச் சேர்ந்த பஞ்சாபி இந்துவான  ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞரை  வரவழைத்து பாகிஸ்தானின் தேசிய கீதத்தை எழுதச் சொன்னார் ஜின்னா.  ஒரு  காஃபிர் எழுதிய ‘தரனா-இ – பாகிஸ்தான்’ அந்நாட்டின் தேசிய கீதமாக முடிவு செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் நிஜாம் உஸ்மான் அலி, தனது பிரம்மாண்ட அரண்மனையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் உதவியை நாடி, திவான் தயாரித்த கடிதத்தில்,உருது மொழியில் கையெழுத்திட்டு ஒரு சிறப்புத் தூதரைக்  கராச்சிக்கு  அனுப்பிவைத்தார்  நிஜாம்.

அமிர்தசரஸ் முழுவதும் வன்முறைகள் கலவரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப் பட்டனர். இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப் பட்டன. பஞ்சாப் மாகாணம் முழுவதும் பத்திரிக்கை தணிக்கை அமல்படுத்தப் பட்டது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். சுதந்திர வாரக் கொண்டாட்டம்  தொடங்கி இருந்தது. மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேரு,படேல் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

அதேநேரம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்ஸின் மஹால் மூத்த பிரச்சாரகர்களும் சங்கத்தின் அலுவலர்களும் கூடியிருந்தனர். பிரிக்கப்படாத பாரதத்தின் வரைப்படம் அவர்களின் முன் இருந்தது. தேசம் பிரிக்கப்படவுள்ளது. பிரிவினை கோட்டுக்கு அப்பால் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும்  எவ்வாறு பத்திரமாக மீட்டு பாரதத்துக்கு அழைத்து வருவது என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

Tags: 76th independance dayதேசப் பிரிவினை கொடூரங்கள்ஆகஸ்ட் 1947The horrors of partition: What happened on 9 August 1947?
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

Next Post

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies