IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச நாணய நிதியமான IMF-மிடமிருந்து  8,560 கோடி ரூபாய் கடன் பெற்ற பாகிஸ்தான், ஒப்புக்கொண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாரதத்தை இரண்டாகப் பிரித்து,இஸ்லாமிய நாடாக உருவான பாகிஸ்தான், 1958ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைக் கடனாகப் பெற்றுள்ளது. IMF என்ற சர்வதேச நாணய நிதியத்துக்குக் கடன் கேட்டுச் செல்வது என்பது ICU-என்ற தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதாகும்.

ஒரு நோயாளி 25 முறை ICU-வுக்குச் சென்றால், அவன் பிழைப்பதற்கான சாத்திய கூறு மிகக் குறைவு என்பது உண்மை. சொல்லப்போனால் ஒரு ஜனநாயக கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தானில் மக்கள் பிரச்சனைகளும்  பொருளாதார சவால்களும்  அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த நேரத்தில், இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சர்வதேச நாணய நிதியம் IMF, பாகிஸ்தானுக்குக் கடந்த மே மாதம் கடன் வழங்கியது. சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தானின்  மோசமான கடந்த கால வரலாற்றைக்  கருத்தில் கொண்டு, இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை, பாகிஸ்தான் அரசு, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மடைமாற்றம் செய்யப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கும் போதே,ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன்,கூடுதலாக 11 நிபந்தனைகளை IMF விதித்திருந்தது. அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதி அளித்து கடன் பெற்ற பாகிஸ்தான் மூன்று நிபந்தனைகளைக் கூட நிறைவேற்ற வில்லை.

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, பாகிஸ்தானால்  1.2 டிரில்லியன்  அளவுக்குச் சேமிக்க முடியவில்லை. மேலும், மத்திய வருவாய் வாரியத்தால் (FBR) மொத்த வருவாய் இலக்கான 12.3 டிரில்லியனையும் அடைய முடியவில்லை. சில்லறை வணிகர்களிடமிருந்து வரி வசூலிக்கத் தொடங்கப்பட்ட ‘தாஜிர் தோஸ்த் திட்டத்தின்’ கீழ் 50 பில்லியன் இலக்கையும் பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை.

பாகிஸ்தான் தனது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து அடுத்த பொருளாதார நெருக்கடிக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: pakistan news todayPakistan cheated the IMF: Struggling to meet loan conditionsIMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான்கடன் நிபந்தனைசர்வதேச நாணய நிதியமான IMF-
ShareTweetSendShare
Previous Post

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Next Post

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies