IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!
Sep 24, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச நாணய நிதியமான IMF-மிடமிருந்து  8,560 கோடி ரூபாய் கடன் பெற்ற பாகிஸ்தான், ஒப்புக்கொண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாரதத்தை இரண்டாகப் பிரித்து,இஸ்லாமிய நாடாக உருவான பாகிஸ்தான், 1958ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைக் கடனாகப் பெற்றுள்ளது. IMF என்ற சர்வதேச நாணய நிதியத்துக்குக் கடன் கேட்டுச் செல்வது என்பது ICU-என்ற தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதாகும்.

ஒரு நோயாளி 25 முறை ICU-வுக்குச் சென்றால், அவன் பிழைப்பதற்கான சாத்திய கூறு மிகக் குறைவு என்பது உண்மை. சொல்லப்போனால் ஒரு ஜனநாயக கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தானில் மக்கள் பிரச்சனைகளும்  பொருளாதார சவால்களும்  அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த நேரத்தில், இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சர்வதேச நாணய நிதியம் IMF, பாகிஸ்தானுக்குக் கடந்த மே மாதம் கடன் வழங்கியது. சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தானின்  மோசமான கடந்த கால வரலாற்றைக்  கருத்தில் கொண்டு, இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை, பாகிஸ்தான் அரசு, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மடைமாற்றம் செய்யப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கும் போதே,ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன்,கூடுதலாக 11 நிபந்தனைகளை IMF விதித்திருந்தது. அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதி அளித்து கடன் பெற்ற பாகிஸ்தான் மூன்று நிபந்தனைகளைக் கூட நிறைவேற்ற வில்லை.

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, பாகிஸ்தானால்  1.2 டிரில்லியன்  அளவுக்குச் சேமிக்க முடியவில்லை. மேலும், மத்திய வருவாய் வாரியத்தால் (FBR) மொத்த வருவாய் இலக்கான 12.3 டிரில்லியனையும் அடைய முடியவில்லை. சில்லறை வணிகர்களிடமிருந்து வரி வசூலிக்கத் தொடங்கப்பட்ட ‘தாஜிர் தோஸ்த் திட்டத்தின்’ கீழ் 50 பில்லியன் இலக்கையும் பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை.

பாகிஸ்தான் தனது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து அடுத்த பொருளாதார நெருக்கடிக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: சர்வதேச நாணய நிதியமான IMF-pakistan news todayPakistan cheated the IMF: Struggling to meet loan conditionsIMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான்கடன் நிபந்தனை
ShareTweetSendShare
Previous Post

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Next Post

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Related News

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

டிரம்ப், மெலினா தம்பதி சென்ற போது பழுதாகி நின்ற எஸ்கலேட்டர்!

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – 950 பேர் பலி!

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

குஜராத் : நவராத்திரியையொட்டி பாரம்பரிய கர்பா நடனம் அரங்கேற்றம்!

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies