டெல்லியில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை தொடரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக வானிலை சீராக இல்லாததால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 105 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.