காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!
Nov 12, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ், தமிழ் என முழங்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் மட்டுமே வைக்க வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது .

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின் படி ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் இன்றளவும் அனைத்து பெயர்ப்பலகைகளும் ஆங்கிலத்திலேயே காட்சியளிக்கின்றன. பெயரளவிற்காக மட்டுமே ஒரு ஓரத்தில் தமிழில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்

தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் தமிழ் பலகையை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ்வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு, தமிழில் பெயர் பலகையை வைக்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும்  எழுந்துள்ளது.

Tags: today newstn news todayGovernment order in the air: Complaint about Tamil missing from name boards
ShareTweetSendShare
Previous Post

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

Next Post

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Related News

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies