தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையின் நகர் பகுதிகளுக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளில் ஒன்றான செல்லூர் கண்மாய், வைகையின் வடக்குப்புறம் அமைந்துள்ளது. ஆனையூர், சீலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களின் மூலமாகவும் மழைநீர் மூலமாகவும் செல்லூர் கண்மாய் நீரை பெற்று வருகிறது.

அதோடு சாத்தையாறு அணை மற்றும் கூடல் நகர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய நீரும், சேரும் கடைமடையாக இந்த செல்லூர் கண்மாய் திகழ்கிறது. இத்தகைய கண்மாய் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பின் காரணமாகவும் சுருங்கி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

230 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லூர் கண்மாயின் மூலம் சுமார் 80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் காரணத்தினாலும், கண்மாய் முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையாலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

செல்லூர் கண்மாயை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாததன் விளைவே கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது குடியிருப்புகளுக்குள் மழைநீர் புக காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செல்லூர் கண்மாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அகற்றுவதோடு, கண்மாய் முழுவதையும் தூர்வார வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், அலட்சியப் போக்குடன் செயல்படும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கண்மாயில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவிற்குத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு ஒதுக்கும் தொகையை முறையாகப் பயன்படுத்தி மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயை முழுமையாகத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureSadness due to lack of water: Sewage mixed in the beauty of the villageகண்மாயில் கலக்கும் கழிவுநீர்தூர் வாராததால் துயரம்
Share
Tweet
SendShare
Previous Post

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Next Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies