காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!
Sep 17, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ், தமிழ் என முழங்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் மட்டுமே வைக்க வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது .

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின் படி ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் இன்றளவும் அனைத்து பெயர்ப்பலகைகளும் ஆங்கிலத்திலேயே காட்சியளிக்கின்றன. பெயரளவிற்காக மட்டுமே ஒரு ஓரத்தில் தமிழில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்

தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் தமிழ் பலகையை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ்வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு, தமிழில் பெயர் பலகையை வைக்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும்  எழுந்துள்ளது.

Tags: today newstn news todayGovernment order in the air: Complaint about Tamil missing from name boards
Share
Tweet
SendShare
Previous Post

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

Next Post

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Related News

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies