தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையின் நகர் பகுதிகளுக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளில் ஒன்றான செல்லூர் கண்மாய், வைகையின் வடக்குப்புறம் அமைந்துள்ளது. ஆனையூர், சீலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களின் மூலமாகவும் மழைநீர் மூலமாகவும் செல்லூர் கண்மாய் நீரை பெற்று வருகிறது.

அதோடு சாத்தையாறு அணை மற்றும் கூடல் நகர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய நீரும், சேரும் கடைமடையாக இந்த செல்லூர் கண்மாய் திகழ்கிறது. இத்தகைய கண்மாய் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பின் காரணமாகவும் சுருங்கி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

230 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லூர் கண்மாயின் மூலம் சுமார் 80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் காரணத்தினாலும், கண்மாய் முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையாலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

செல்லூர் கண்மாயை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாததன் விளைவே கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது குடியிருப்புகளுக்குள் மழைநீர் புக காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செல்லூர் கண்மாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அகற்றுவதோடு, கண்மாய் முழுவதையும் தூர்வார வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், அலட்சியப் போக்குடன் செயல்படும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கண்மாயில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவிற்குத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு ஒதுக்கும் தொகையை முறையாகப் பயன்படுத்தி மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயை முழுமையாகத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureSadness due to lack of water: Sewage mixed in the beauty of the villageகண்மாயில் கலக்கும் கழிவுநீர்தூர் வாராததால் துயரம்
ShareTweetSendShare
Previous Post

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Next Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies