தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!
Nov 11, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையின் நகர் பகுதிகளுக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளில் ஒன்றான செல்லூர் கண்மாய், வைகையின் வடக்குப்புறம் அமைந்துள்ளது. ஆனையூர், சீலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களின் மூலமாகவும் மழைநீர் மூலமாகவும் செல்லூர் கண்மாய் நீரை பெற்று வருகிறது.

அதோடு சாத்தையாறு அணை மற்றும் கூடல் நகர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய நீரும், சேரும் கடைமடையாக இந்த செல்லூர் கண்மாய் திகழ்கிறது. இத்தகைய கண்மாய் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பின் காரணமாகவும் சுருங்கி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

230 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லூர் கண்மாயின் மூலம் சுமார் 80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் காரணத்தினாலும், கண்மாய் முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையாலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

செல்லூர் கண்மாயை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாததன் விளைவே கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது குடியிருப்புகளுக்குள் மழைநீர் புக காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செல்லூர் கண்மாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அகற்றுவதோடு, கண்மாய் முழுவதையும் தூர்வார வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், அலட்சியப் போக்குடன் செயல்படும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கண்மாயில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவிற்குத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு ஒதுக்கும் தொகையை முறையாகப் பயன்படுத்தி மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயை முழுமையாகத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureSadness due to lack of water: Sewage mixed in the beauty of the villageகண்மாயில் கலக்கும் கழிவுநீர்தூர் வாராததால் துயரம்
ShareTweetSendShare
Previous Post

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

Next Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies