தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வரும் விற்பனையால் சிலை வடிவமைக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளன.

விநாயகப் பெருமானின் தெய்வீகக் குணங்களைக் கொண்டாடும் விநாயகர் சதூர்த்தி ஆண்டுதோறும் தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், மூன்று தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், கொண்டையம்பட்டி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளின் விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகச் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

50 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதியில்லை, ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும், பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை ஆண்டுக்கு ஆண்டு அடுக்கிக் கொண்டே போவதாகத் தமிழக அரசின் மீது புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைவால் அதன் விற்பனையும் சரியத் தொடங்கியுள்ளது

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலைகளை வாங்க போதுமான ஆர்வம் இல்லாத காரணத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகச் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு அவர்களுக்கு மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu government restrictions: Ganesha statue workers in painவேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்தமிழக அரசின் கட்டுப்பாடுகள்விநாயக சதுர்த்தி பண்டிகை
ShareTweetSendShare
Previous Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Next Post

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies