தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!
Sep 27, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வரும் விற்பனையால் சிலை வடிவமைக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளன.

விநாயகப் பெருமானின் தெய்வீகக் குணங்களைக் கொண்டாடும் விநாயகர் சதூர்த்தி ஆண்டுதோறும் தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், மூன்று தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், கொண்டையம்பட்டி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளின் விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகச் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

50 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதியில்லை, ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும், பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை ஆண்டுக்கு ஆண்டு அடுக்கிக் கொண்டே போவதாகத் தமிழக அரசின் மீது புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைவால் அதன் விற்பனையும் சரியத் தொடங்கியுள்ளது

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலைகளை வாங்க போதுமான ஆர்வம் இல்லாத காரணத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகச் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு அவர்களுக்கு மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu government restrictions: Ganesha statue workers in painவேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்தமிழக அரசின் கட்டுப்பாடுகள்விநாயக சதுர்த்தி பண்டிகை
ShareTweetSendShare
Previous Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Next Post

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

Related News

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies