தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!
Aug 9, 2025, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வரும் விற்பனையால் சிலை வடிவமைக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளன.

விநாயகப் பெருமானின் தெய்வீகக் குணங்களைக் கொண்டாடும் விநாயகர் சதூர்த்தி ஆண்டுதோறும் தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், மூன்று தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், கொண்டையம்பட்டி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளின் விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகச் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

50 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதியில்லை, ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும், பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை ஆண்டுக்கு ஆண்டு அடுக்கிக் கொண்டே போவதாகத் தமிழக அரசின் மீது புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைவால் அதன் விற்பனையும் சரியத் தொடங்கியுள்ளது

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலைகளை வாங்க போதுமான ஆர்வம் இல்லாத காரணத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகச் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு அவர்களுக்கு மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்தமிழக அரசின் கட்டுப்பாடுகள்விநாயக சதுர்த்தி பண்டிகைTamil Nadu government restrictions: Ganesha statue workers in pain
ShareTweetSendShare
Previous Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Next Post

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

Related News

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies