ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எக்ஸ் பக்கத்தில் வம்பிழுக்கும் வகையில் கருத்து தெரிவித்த எலான் மஸ்கிற்கு, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா நட்பார்ந்த முறையில் பதிலளித்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஹைதராபாத்தில் பிறந்தவரான சத்ய நாதெல்லா, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். fortune நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, அதிக சக்தி வாய்ந்த டாப் 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியலில், இவர் 2ம் இடம் பிடித்திருந்தார். ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர்கூட இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தனர்.

அந்த அளவுக்கு, தான் சார்ந்த துறையில் ஜாம்பவானாகவும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்பவராகவும் சத்ய நாதெல்லா விளங்குகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றைப் போட்டிருந்தார். அதில், மைக்ரோசாஃப்டின் அனைத்து தளங்களிலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் GPT-5 அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். Microsoft 365 Copilot, Copilot, GitHub Copilot, Azure AI Foundry உள்ளிட்டவற்றில் இனி GPT-5ஐ பங்களிப்பு இருக்கும் எனவும் கூறினார்.

இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை ஓபன் ஏஐ நிறுவனம் மொத்தமாக விழுங்கப் போகிறது எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த சத்ய நாதெல்லா, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற 50 ஆண்டுகளாகப் பலர் முயன்று வருவதாகவும், இது மிகவும் வேடிக்கையான ஒன்று எனவும் தெரிவித்தார். எலான் மஸ்க் வடிவமைத்து வரும் செயற்கை நுண்ணறிவு தளமான grok-4ஐ மைக்ரோ சாஃப்டின் Azure தளத்தில் பயன்படுத்த ஆவலாக இருப்பதாகவும், grokன் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

சத்யா நாதெல்லாவின் இந்த பதில் மிகவும் முதிர்ச்சியுடன் உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். PRS எண்டர்பிரைசஸின் தலைவரான ஹர்ஸ் கோயங்கா (Harsh Goenka), எலான் மஸ்கிற்கு மாஸ்டர் கிளாஸ் பதிலை சத்ய நாதெல்லா வழங்கியுள்தாக குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்குவம் வாய்ந்த நபரின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், உரையாடலை ஆரோக்கியமான முறையில் அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்வது என்பதற்கும் இந்த பதில் சிறந்த உதாரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மோசமான கருத்துக்கு, நாமும் மோசமான கருத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை சத்ய நாதெல்லாவின் பதில் உணர்த்துவதாக மற்றொரு நபர் கூறியுள்ளார். இந்தியர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று எனவும், தலைமைத்துவம் என்பது ஆணவத்திற்குப் பதிலான கருணையை முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.

Tags: Elon Musk gets angry on Twitter: Satya Nadella responds in a friendly mannerElon muskஎலான் மஸ்க்சத்ய நாதெல்லா
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Next Post

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies