இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? - சிறப்பு தொகுப்பு!
Sep 26, 2025, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Aug 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

பதவியேற்ற நாள் முதலே, எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விட வேண்டும் என்பதில் ட்ரம்ப் குறியாக உள்ளார். அதற்கான காய்களையும் அவர் ஆரம்பம் முதலே நகர்த்தி வருகிறார்.

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவிற்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், 2017ம் ஆண்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அமெரிக்காவின் எதிரி நாடாகக் கருதப்பட்ட வடகொரியாவுக்கும் பயணம் மேற்கொண்டு, கிம் ஜாங் உன்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாலிபான் ஆட்சியாளர்களையும் சந்தித்து பேசிய அவர், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தம் ஏற்படவும் காரணமாக இருந்தார். இப்படி, சர்வதேச அளவில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ட்ரம்ப் உள்ளார். ஆனால், இதற்கு இந்தியா முட்டுக்கட்டையாக உள்ளதாக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நிறுத்தி உலக அமைதிக்கு வழிவகுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தம்மால்தான் முடிவுக்கு வந்ததாகவும், அதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணுஆயுத போரை, தான் தடுத்து நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஒருமுறை அல்ல, 25 முறைக்கும் மேல் அவர் இவ்வாறு கூறினார்.

ஆனால், இதனை இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தான் மன்றாடியதால்தான் தாக்குதலை நிறுத்தியாக இந்தியா தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது.

இந்தியா தெரிவித்த இந்த மறுப்பு, ட்ரம்பின் கூற்றின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை ஒரு அவமானமாகக் கருதும் டிரம்ப், இதன் காரணமாக இந்தியா மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புவிசார் அரசியல் அறிஞர் யூசுப் உன்ஜாவாலா மேலும் சில விஷயங்களைக் கூறுகிறார். ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

மாநாட்டை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு வரும்படி மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியான அசீம் முனீரும் அமெரிக்காவில்தான் இருந்தார்.

எனவே, வெள்ளை மாளிகையில் மோடி மற்றும்  அசீம் முனீர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கையை அறிவித்து விடலாம் என ட்ரம்ப் கருதினார். ஆனால், மோடி வெள்ளை மாளிகைக்குச் செல்லாததால் ட்ரம்பின் திட்டம் தவிடுபொடியானதாக, யூசுப் உன்ஜாவாலா தெரிவிக்கிறார்.

சரி, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி வைத்து நல்ல பெயர் வாங்கலாம் என்றால், அதற்கு ரஷ்யா சம்மதிக்கவில்லை. எனவே, ரஷ்யாவை தனிமைப்படுத்த முடிவெடுத்த ட்ரம்ப், அந்நாட்டுடன் யாரும் வர்த்தக உறவு மேற்கொள்ள கூடாது என வற்புறுத்தினார். ஆனால், அதனையும் இந்தியா ஏற்கவில்லை.

இப்படி, நோபல் பரிசை நோக்கிய தனது பயணத்திற்குத்  தடையாக உள்ளதால்தான், இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததாக கூறப்படுகிறது. மாறாக,  உக்ரைன் போரை நிறுத்தி உலக அமைதியை ஏற்படுத்துவது எல்லாம் அவரின் நோக்கம் இல்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

Tags: இந்தியா மீதான 50% வரி விதிப்புட்ரம்பின் ஈகோusa50Donald Trumpindia vs america50% tariff on India: Is Trump's ego to blame?
ShareTweetSendShare
Previous Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Next Post

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies