இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

பதவியேற்ற நாள் முதலே, எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விட வேண்டும் என்பதில் ட்ரம்ப் குறியாக உள்ளார். அதற்கான காய்களையும் அவர் ஆரம்பம் முதலே நகர்த்தி வருகிறார்.

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவிற்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், 2017ம் ஆண்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அமெரிக்காவின் எதிரி நாடாகக் கருதப்பட்ட வடகொரியாவுக்கும் பயணம் மேற்கொண்டு, கிம் ஜாங் உன்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாலிபான் ஆட்சியாளர்களையும் சந்தித்து பேசிய அவர், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தம் ஏற்படவும் காரணமாக இருந்தார். இப்படி, சர்வதேச அளவில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ட்ரம்ப் உள்ளார். ஆனால், இதற்கு இந்தியா முட்டுக்கட்டையாக உள்ளதாக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நிறுத்தி உலக அமைதிக்கு வழிவகுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தம்மால்தான் முடிவுக்கு வந்ததாகவும், அதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணுஆயுத போரை, தான் தடுத்து நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஒருமுறை அல்ல, 25 முறைக்கும் மேல் அவர் இவ்வாறு கூறினார்.

ஆனால், இதனை இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தான் மன்றாடியதால்தான் தாக்குதலை நிறுத்தியாக இந்தியா தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது.

இந்தியா தெரிவித்த இந்த மறுப்பு, ட்ரம்பின் கூற்றின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை ஒரு அவமானமாகக் கருதும் டிரம்ப், இதன் காரணமாக இந்தியா மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புவிசார் அரசியல் அறிஞர் யூசுப் உன்ஜாவாலா மேலும் சில விஷயங்களைக் கூறுகிறார். ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

மாநாட்டை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு வரும்படி மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியான அசீம் முனீரும் அமெரிக்காவில்தான் இருந்தார்.

எனவே, வெள்ளை மாளிகையில் மோடி மற்றும்  அசீம் முனீர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கையை அறிவித்து விடலாம் என ட்ரம்ப் கருதினார். ஆனால், மோடி வெள்ளை மாளிகைக்குச் செல்லாததால் ட்ரம்பின் திட்டம் தவிடுபொடியானதாக, யூசுப் உன்ஜாவாலா தெரிவிக்கிறார்.

சரி, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி வைத்து நல்ல பெயர் வாங்கலாம் என்றால், அதற்கு ரஷ்யா சம்மதிக்கவில்லை. எனவே, ரஷ்யாவை தனிமைப்படுத்த முடிவெடுத்த ட்ரம்ப், அந்நாட்டுடன் யாரும் வர்த்தக உறவு மேற்கொள்ள கூடாது என வற்புறுத்தினார். ஆனால், அதனையும் இந்தியா ஏற்கவில்லை.

இப்படி, நோபல் பரிசை நோக்கிய தனது பயணத்திற்குத்  தடையாக உள்ளதால்தான், இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததாக கூறப்படுகிறது. மாறாக,  உக்ரைன் போரை நிறுத்தி உலக அமைதியை ஏற்படுத்துவது எல்லாம் அவரின் நோக்கம் இல்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

Tags: இந்தியா மீதான 50% வரி விதிப்புட்ரம்பின் ஈகோusa50Donald Trumpindia vs america50% tariff on India: Is Trump's ego to blame?
ShareTweetSendShare
Previous Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Next Post

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies