வார விடுமுறை - உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Aug 11, 2025, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வார விடுமுறை – உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Desk by Web Desk
Aug 10, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வார விடுமுறையையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி மற்றும் உதகையின் இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு ரசிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர்.

குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புல்வெளி மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடினர். மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு, இயற்கையின் அழகை ரசித்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதிலும் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியானது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. வார விடுமுறையை கொண்டாட தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.

பராமரிப்பு பணி காரணமாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து பொழுதை கழித்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கவியருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வார விடுமுறையையொட்டி கவியருவியில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

Tags: Ooty Botanical GardenBoat HouseyercaudweekendThirparappu Falls
ShareTweetSendShare
Previous Post

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

Related News

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு – காஞ்சிபுரம் ரன்னர்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி!

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies