வார விடுமுறை - உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Sep 14, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வார விடுமுறை – உதகை, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வார விடுமுறையையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி மற்றும் உதகையின் இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு ரசிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர்.

குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புல்வெளி மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடினர். மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு, இயற்கையின் அழகை ரசித்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதிலும் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியானது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. வார விடுமுறையை கொண்டாட தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.

பராமரிப்பு பணி காரணமாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து பொழுதை கழித்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கவியருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வார விடுமுறையையொட்டி கவியருவியில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

Tags: yercaudweekendThirparappu FallsOoty Botanical GardenBoat House
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies