மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் - வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் – வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச சேர்ந்த 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிமுக தொடர்ந்த வழக்கு அடிப்படையில் முறைகேடு வழக்கை, மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேட்டில் கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மேயரின் கணவர் பொன்வசந்த் , திமுக கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்த செல்வாக்கால் தன் மனைவிக்குச் சொத்து வரிவிதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததாகவும், ஏராளமான கடைகள், நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் பல்வேறு கடைகளுக்கு வரி குறைப்பு செய்துள்ளதாகவும் காளவாசலில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் வரியைப் பூஜ்யமாக மாற்ற லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

“சாதாரண கண்ணனாக இருந்த தான், வரி கண்ணனாக” மதுரையில் அழைக்கப்பட்டதன் காரணம்குறித்த பின்னணியையும் வாக்குமூலத்தில் விவரித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த், கண்ணனை தனக்கு தெரியாது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது, ஏதாவது கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: arrestedமதுரை மாநகராட்சிA multi-crore fraud case in Madurai Corporation - 12 peopleincluding a revenue assistant
ShareTweetSendShare
Previous Post

சீனா : குழந்தைகளை கவர்ந்த உலக ரோபோக்கள் கண்காட்சி!

Next Post

கலிபோர்னியா : உலகின் அழகற்ற நாய் விருதை வென்ற பெடுனியா!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies