மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் - வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!
Nov 17, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் – வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச சேர்ந்த 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிமுக தொடர்ந்த வழக்கு அடிப்படையில் முறைகேடு வழக்கை, மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேட்டில் கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மேயரின் கணவர் பொன்வசந்த் , திமுக கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்த செல்வாக்கால் தன் மனைவிக்குச் சொத்து வரிவிதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததாகவும், ஏராளமான கடைகள், நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் பல்வேறு கடைகளுக்கு வரி குறைப்பு செய்துள்ளதாகவும் காளவாசலில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் வரியைப் பூஜ்யமாக மாற்ற லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

“சாதாரண கண்ணனாக இருந்த தான், வரி கண்ணனாக” மதுரையில் அழைக்கப்பட்டதன் காரணம்குறித்த பின்னணியையும் வாக்குமூலத்தில் விவரித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த், கண்ணனை தனக்கு தெரியாது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது, ஏதாவது கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: arrestedமதுரை மாநகராட்சிA multi-crore fraud case in Madurai Corporation - 12 peopleincluding a revenue assistant
ShareTweetSendShare
Previous Post

சீனா : குழந்தைகளை கவர்ந்த உலக ரோபோக்கள் கண்காட்சி!

Next Post

கலிபோர்னியா : உலகின் அழகற்ற நாய் விருதை வென்ற பெடுனியா!

Related News

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies