மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் - வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் – வருவாய் உதவியாளர் உள்பட 12 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச சேர்ந்த 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிமுக தொடர்ந்த வழக்கு அடிப்படையில் முறைகேடு வழக்கை, மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேட்டில் கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மேயரின் கணவர் பொன்வசந்த் , திமுக கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்த செல்வாக்கால் தன் மனைவிக்குச் சொத்து வரிவிதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததாகவும், ஏராளமான கடைகள், நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் பல்வேறு கடைகளுக்கு வரி குறைப்பு செய்துள்ளதாகவும் காளவாசலில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் வரியைப் பூஜ்யமாக மாற்ற லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

“சாதாரண கண்ணனாக இருந்த தான், வரி கண்ணனாக” மதுரையில் அழைக்கப்பட்டதன் காரணம்குறித்த பின்னணியையும் வாக்குமூலத்தில் விவரித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த், கண்ணனை தனக்கு தெரியாது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது, ஏதாவது கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: arrestedமதுரை மாநகராட்சிA multi-crore fraud case in Madurai Corporation - 12 peopleincluding a revenue assistant
Share
Tweet
SendShare
Previous Post

சீனா : குழந்தைகளை கவர்ந்த உலக ரோபோக்கள் கண்காட்சி!

Next Post

கலிபோர்னியா : உலகின் அழகற்ற நாய் விருதை வென்ற பெடுனியா!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies