இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி
Nov 11, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Aug 11, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.அதுதொடர்பான முழு விபரங்களை இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பயணநேரத்தை குறைக்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விமான நிலையங்கள் விரிவாக்கம், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைப்பு என அதற்கான பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், 150ஆவது வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீமாதா வைஷ்ணவ்தேவி கத்ரி, அஜ்னி – புனே ஆகிய வழித்தடங்களில், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூருவின் ஆர்.வி.ரோடு முதல் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை 18 புள்ளி 82 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மெட்ரோ வசதி செய்யப்பட்டுள்ளது. சேவையைத் தொடங்கி வைத்த பின், மெட்ரோ ரயிலில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் இணைந்து அவர் பயணம் செய்தார்.

அப்போது, ரயிலில் பயணித்த மாணவர்களுடன் சிரித்து பேசி மகிழ்ந்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்ததாகவும், பெங்களூருவும், அதன் இளைஞர்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் மோடி குறிப்பிட்டார்.மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும், இந்தியாவின் வலிமை உலகெங்கும் பறைசாற்றப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்த மோடி, எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என விமர்சித்ததுடன், 50 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ள நிலையில், பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiNo force can stop India's growth: PM Modiஇந்தியாவின் வளர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Next Post

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

Related News

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies