பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!
Aug 12, 2025, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.

பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.

அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர்,  கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.

தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.

மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும்,  shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும்  புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.

Tags: The mystery of the Bermuda Triangle has been solvedபெர்முடா முக்கோணத்தின் மர்மம்பெர்முடா முக்கோணம்
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

Next Post

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

Related News

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

வனங்களின் பாதுகாவலன்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: – விசாரணைக் குழு அமைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதல்!

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies