பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.

பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.

அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர்,  கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.

தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.

மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும்,  shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும்  புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.

Tags: The mystery of the Bermuda Triangle has been solvedபெர்முடா முக்கோணத்தின் மர்மம்பெர்முடா முக்கோணம்
ShareTweetSendShare
Previous Post

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies