சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?
Jun 14, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும்  வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டம்  இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது..

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இந்தநிலையில், உலகத்தின் கூரையான திபெத்தின் ஒவ்வொரு பகுதியையும், தங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைக்கச் சீனா திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது. அதன்படி திபெத்தை சீனாவின் வடக்குப் பகுதியான ஷின்ஜியாங் உடன் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது. ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதியை இணைக்கும் இந்த திட்டம், உண்மையில் சீன ரயில்களை இந்தியாவின் நுழைவு வாயிலான அக்சாய்சின் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அக்சாய் சின், 1962 ஆண்டு சீனப்போரின்போது சீனாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக மாறியது. மாவோவின் சீனா என்ற மெகா-உள்கட்டமைப்பு திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு, அக்சாய் சின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த ரயில் பாதை சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சாய்சின் பகுதியையொட்டி, கடந்த 1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையைச் சீனா அமைத்திருந்தது. தற்போது அதே பகுதியில் ரயில் பாதைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள லாசா – நியிஞ்சி ரயில் பாதையைச் சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள ராணுவ தளமான செங்டு பகுதியுடன் இணைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையிலும், நேபாள எல்லையை இணைக்கும் வகையிலும், ரயில் பாதைகளை அமைக்கச் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய எல்லையை நோக்கி சீன துருப்புகளை எளிதாக அனுப்பவும், ராணுவத் தளவாடங்களை எல்லையை நோக்கி வேகமாக நகர்த்தவும் இந்த ரயில் பாதைகள் உதவும் என்று கருதப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையொட்டி சீனா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில்,  இந்தியாவும்  தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: China's new railway project: Will India retaliate?சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம்Indiaஇந்தியாchina newschina news today
ShareTweetSendShare
Previous Post

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Next Post

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies