அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
Aug 13, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 07:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொங்கு மண்டலத்திற்கு பெரும் பலனளிக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைத் திமுக அரசு பத்து நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரை நூற்றாண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தொடர் போராட்டத்தின் விளைவாக ஓராண்டுக்கு முன்பு பெயருக்கு செயல்படுத்திவிட்டு. பின்பு அதிலும் பல குளறுபடிகளை உட்புகுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு என தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாது இத்திட்டத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக கூறியுள்ளார்.

திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு ஆன பின்பும், இன்னும் பெருவாரியான குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்படவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம் குட்டைகளையும் இரண்டாம் கட்டமாக இணைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையையும் கண்டுகொள்ளாதிருப்பது இத்திட்டத்தில் திமுக அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்ததாலேயே திமுக அரசு திட்டத்தைத் தொடக்கி வைத்தது என்பது உலகறிந்த உண்மை. இன்னும் எத்தனை போராட்டங்களை பாஜக முன்னெடுத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவம் விடியா அரசின் விழிகளுக்குப் புலப்படும்? போராடினால் மட்டும் தான் திராவிட மாடல் அரசு தனது கடமையை முறையாகச் செய்ய முன்வருமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் ஆட்சி முடிவதற்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் பத்து நாட்களுக்குள் அத்திக்கடவு-அவினாசித் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், முன்னாள் மாநிலத் தலைவரும் சகோதரருமான அண்ணாமலை அவர்கள் அறிவித்தபடி தமிழக பாஜக சார்பாக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இனிமேலும் காலந்தாழ்த்தி கொங்கு மண்டல மக்களை வதைக்காது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தமிழக பாஜகவின் தீவிர நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Athikadavu-Avinasi projectDravidian model governmentAIADMK regime.nainaar nagendran
ShareTweetSendShare
Previous Post

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Next Post

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

Related News

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies