அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
Jun 12, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2025, 07:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொங்கு மண்டலத்திற்கு பெரும் பலனளிக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைத் திமுக அரசு பத்து நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரை நூற்றாண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தொடர் போராட்டத்தின் விளைவாக ஓராண்டுக்கு முன்பு பெயருக்கு செயல்படுத்திவிட்டு. பின்பு அதிலும் பல குளறுபடிகளை உட்புகுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு என தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாது இத்திட்டத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக கூறியுள்ளார்.

திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு ஆன பின்பும், இன்னும் பெருவாரியான குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்படவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம் குட்டைகளையும் இரண்டாம் கட்டமாக இணைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையையும் கண்டுகொள்ளாதிருப்பது இத்திட்டத்தில் திமுக அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்ததாலேயே திமுக அரசு திட்டத்தைத் தொடக்கி வைத்தது என்பது உலகறிந்த உண்மை. இன்னும் எத்தனை போராட்டங்களை பாஜக முன்னெடுத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவம் விடியா அரசின் விழிகளுக்குப் புலப்படும்? போராடினால் மட்டும் தான் திராவிட மாடல் அரசு தனது கடமையை முறையாகச் செய்ய முன்வருமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் ஆட்சி முடிவதற்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் பத்து நாட்களுக்குள் அத்திக்கடவு-அவினாசித் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், முன்னாள் மாநிலத் தலைவரும் சகோதரருமான அண்ணாமலை அவர்கள் அறிவித்தபடி தமிழக பாஜக சார்பாக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இனிமேலும் காலந்தாழ்த்தி கொங்கு மண்டல மக்களை வதைக்காது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தமிழக பாஜகவின் தீவிர நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Athikadavu-Avinasi projectDravidian model governmentAIADMK regime.nainaar nagendran
ShareTweetSendShare
Previous Post

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Next Post

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies