நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
Nov 15, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடப்பாண்டில் 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு ஆளும் திமுக அரசின் நிர்வாக லட்சணத்தையும் நமக்கு தோலுரித்துக் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்தில் தூக்கி நிறுத்தியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனையா? என்றும் அவர் வினவியுள்ளார்.

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் ஏற்கனவே உயிர்பயத்தில் வாழும் தமிழக மக்கள். கட்டுக்கடங்காமல் பெருகி வரும் தெருநாய்களின் தொல்லையால் தற்போது பொதுவெளியில் நடமாடுவதற்கே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தெருவில் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தும் திராணியற்ற ஆளும் அரசு, நல்ல ரக நாய்களை நாங்களே விற்கிறோம் எனக் கிளம்பியுள்ளது வேடிக்கையானது.
தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னென்ன? அவர்களின் தேவை என்ன? ஒரு அரசின் கடமை என்ன? என்பது குறித்த சிந்தனை கூட இல்லாத திமுக அரசு. தங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகளைத் திட்டங்களாகத் தீட்டி, அதற்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி ஒரு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு ஃபோட்டோஷூட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வரை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தெருநாய்களின் எண்ணிக்கையும் ரேபிஸ் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு மாநில நாய் இனப்பெருக்கக் கொள்கை” என்னவானது?

ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் நலனுக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி எங்கே போனது? அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்கிறதா? நாய்க்கடிக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? தங்கள் மாநிலத்தின் தெருநாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்ற கேரள அரசை இதுவரைக் கண்டிக்காதது ஏன்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தையும், ரேபிஸ் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் திமுக அரசு துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசைக் கண்டித்து பல போராட்டங்களைத் தமிழக பாஜக முன்னெடுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

Tags: Tamil Nadu is number 1 in dog bitesDMK government ibjpbjp proteststalinTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

Next Post

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Related News

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies