சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
Sep 30, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில்,  தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற  சுதந்திர அடையாளமாக  விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம்.

ஆங்கில ஆட்சிக்கு எதிரான  முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகு முத்துக் கோன், 1710-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் அழகுமுத்துகோன் மன்னராக முடிசூடிக்கொண்டார்.  எட்டயபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்ற கான்சாகிப் வந்தனர்.

ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டக்கூடாது என்று முடிவெடுத்த அழகுமுத்துக்கோன், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை ?  எனக் கேள்வி கேட்டு கான்சாகிப்புக்கு கடிதம் எழுதினார்.

கடும் கோபமடைந்த கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்துக் கொண்டு எட்டயபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினான். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கும் கான்சாகிப்புக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.

இறுதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்களை  வெட்டிய பிரிட்டிஷ் படை, அவர்களைத் துடிதுடிக்கக் கொன்று குவித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயின் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில்  மாவீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின.

வெடித்துச் சிதறிய  மாவீரன் அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைத்து சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அந்த இடத்தில் ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

வீர மரணம் அடைந்தவர்களுக்கான நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு, பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

Tags: freedom fighter78th independance dayThe symbol of freedom is the beautiful pearl of the hero
ShareTweetSendShare
Previous Post

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies