முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!
Sep 30, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்தமிழகத்து, மக்களின் பசிபோக்கி உயிர் காக்கும் ஜீவனாக விளங்குவது முல்லைப் பெரியார் அணை. 1789-ம் ஆண்டு, இந்த அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டியவர், இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரியான முத்து இருளப்ப பிள்ளை.

இராமநாத சமஸ்தானத்தில் திவானாக விளங்கியவர் முத்து இருளப்ப பிள்ளை. தென் தமிழகத்தில் 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான்.

அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் ஆண்டுக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.  தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கை மற்றும் இராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறு ஏற்பட்டு மக்களை வாட்டின.

அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.

மேற்கே உருவாகி வீணாகக் கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும்.  அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் உதித்தது.

இதைக் கேட்டவுடன் சேதுபதி மன்னர், முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரங்களை அறிந்துவரச் சொன்னார்.

மனித காலடிகளே படாத மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணா துயரத்துக்கும், விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடிக் கண்டு பிடித்தார்.

அதன் பிறகு, முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைக் கட்டும் திட்டத்தை வகுத்து, அதற்கான கட்டுமானச் சாத்திய கூறுகளையும் பட்டியலிட்டார்.

ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், முத்து இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது.

மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில், முல்லைப் பெரியார் அணை  1896ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது வரலாறு.

Tags: முல்லைப் பெரியாறு அணைMuthu Irullappa Pillai was the one who laid the foundation of the Mullaperiyar Damமுத்து இருளப்ப பிள்ளை
ShareTweetSendShare
Previous Post

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

Next Post

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies