அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!
Nov 15, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

Web Desk by Web Desk
Aug 15, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பூலாங்குளத்துப்பட்டி கிராம். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சாலை வசதி தொடங்கி, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிய சூழலுக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதன் முறையாகப் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

மாதத்திற்கு பத்து நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமித்திருக்கும் விஷ ஜந்துகளால் குழந்தைகளை அம்மையத்திற்கு அனுப்பிவைக்கவே அச்சப்படுவதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

குடிநீர் தொடங்கி அங்கன்வாடி மையம் வரை எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் காட்சியளிக்கும் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருச்சிA village that has become unlivable due to lack of basic facilitiesபூலாங்குளத்துப்பட்டி கிராம்வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Next Post

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

Related News

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies