அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!
Jan 14, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பூலாங்குளத்துப்பட்டி கிராம். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சாலை வசதி தொடங்கி, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிய சூழலுக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதன் முறையாகப் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

மாதத்திற்கு பத்து நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமித்திருக்கும் விஷ ஜந்துகளால் குழந்தைகளை அம்மையத்திற்கு அனுப்பிவைக்கவே அச்சப்படுவதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

குடிநீர் தொடங்கி அங்கன்வாடி மையம் வரை எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் காட்சியளிக்கும் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருச்சிA village that has become unlivable due to lack of basic facilitiesபூலாங்குளத்துப்பட்டி கிராம்வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Next Post

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies