அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!
Jun 15, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பூலாங்குளத்துப்பட்டி கிராம். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சாலை வசதி தொடங்கி, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிய சூழலுக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதன் முறையாகப் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

மாதத்திற்கு பத்து நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமித்திருக்கும் விஷ ஜந்துகளால் குழந்தைகளை அம்மையத்திற்கு அனுப்பிவைக்கவே அச்சப்படுவதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

குடிநீர் தொடங்கி அங்கன்வாடி மையம் வரை எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் காட்சியளிக்கும் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருச்சிA village that has become unlivable due to lack of basic facilitiesபூலாங்குளத்துப்பட்டி கிராம்வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Next Post

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies