அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 02:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பூலாங்குளத்துப்பட்டி கிராம். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சாலை வசதி தொடங்கி, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிய சூழலுக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதன் முறையாகப் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

மாதத்திற்கு பத்து நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமித்திருக்கும் விஷ ஜந்துகளால் குழந்தைகளை அம்மையத்திற்கு அனுப்பிவைக்கவே அச்சப்படுவதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

குடிநீர் தொடங்கி அங்கன்வாடி மையம் வரை எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் காட்சியளிக்கும் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருச்சிA village that has become unlivable due to lack of basic facilitiesபூலாங்குளத்துப்பட்டி கிராம்வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்
Share
Tweet
SendShare
Previous Post

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Next Post

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies