புதினின் "மலக் கழிவுகள்" சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?
Mar 15, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிரம்புடானான அலஸ்கா சந்திப்புக்கு புதினுடன் சென்ற மெய்க்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேசுடன் சென்ற சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் உலகில் மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பல அடுக்குகள், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் விசேஷ படைத்துறை அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.

அமெரிக்காவின் SECRETE SERVICE போன்று, ரஷ்யாவில் FEDERAL PROTECTIVE SERVICE என்கிற சிறப்புப் பிரிவு, புதினை பாதுகாக்கும் பிரதான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 30 பேர் வரையில், எப்போதும் புதின் அருகிலேயே மெய்க்காப்பாளர்களாக நின்று அவரை இரவு பகலாகப் பாதுகாக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறப்புப் பிரிவை, அந்நாட்டின் வேறு எந்த அதிகார அமைப்பாலும் கட்டுப்படுத்த இயலாது.

வெளிப்படையாகக் காட்சியளிக்கும் மெய்க்காப்பாளர்களைத் தாண்டி மறைமுகமாக இருந்தும் பலர் அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் உயர்நிலை தாக்குதல் தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் எனவும், HAND TO HAND COMBAT , துப்பாக்கி சுடும் திறன் மற்றும் நுண்ணறிவு கண்காணிப்பு போன்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இது தவிர, 1000 கிலோ TNT வெடிபொருட்களைக் கூட தாங்கும் திறனுள்ள பிரத்தியேக பயண வாகனம், சாப்பிடும் உணவுகளை முன்கூட்டியே பரிசோதிக்க பிரத்தியேக உணவு சுவைப்பாளர், முழு எலக்ட்ரானிக் பாதுகாப்புடன் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட தனி விமானம், தனிப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவையும் அதிபர் புதினின் பாதுகாப்பு அம்சங்களுள் அடங்கும்.

மொத்தத்தில் அதிபர் புதின் மீதான கொலை முயற்சி, விஷத் தாக்குதல், ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு மிக கடினமான பாதுகாப்பு வளையத்தினுள் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் வெளிநாட்டுப் பயணங்களில் கூட உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்து நிற்காமல், புதினின் சொந்த பாதுகாப்புக் குழுவே முன்னிலை வகிக்குமாம். அண்மையில் அலாஸ்காவில் நடந்த அதிபர் டிரம்புடனான சந்திப்பின்போது, அதிபர் புதினின் மெய்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேஸை சுமந்து சென்றது பல்வேறு செய்தி ஊடகங்களில் பேசுபொருளானது.

இந்நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருவரின் மலக்கழிவு அல்லது சிறுநீர் மாதிரிகளில் இருந்து அவரது உடல்நிலை, ஹார்மோன் சமநிலை, நோய் மற்றும் மருந்து பயன்பாடு போன்ற பல தகவல்களை கண்டறிய முடியும். ஆக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களோ, பிற அமைப்புகளோ புதினின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதைத் தடுக்கவே அவரது மெய்க்காப்பாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவரது மலம் மற்றும் சிறுநீர் கழிவுகள் பிரத்தியேக பைகளில் சேமிக்கப்பட்டு, அதற்குரிய பெரிய ரக சூட்கேஸில் அடைக்கப்பட்டு ரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதினை தவிர ஸ்டாலின், கிம் ஜாங் உன் போன்ற குறிப்பிட்ட சில தலைவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags: russia newsrussia warExclusive suitcase to collect Putin's "feces": Do you know the reason?russiavladimir puthin
ShareTweetSendShare
Previous Post

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

Next Post

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies