E-OFFICE - முந்தும் திரிபுரா!
Oct 4, 2025, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

E-OFFICE – முந்தும் திரிபுரா!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு அரசு அலுவலகங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருந்தன என்பது கடந்த தலைமுறைக்குத் தெரியும். கட்டுக்கட்டாக கோப்புகள்… மேசைக்கு மேசை FILE-கள்… என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதிலும் பழைய RECORDS-ஐ தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் டிஜிட்டல் புரட்சிக்குப் பிறகு உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

நாளுக்குநாள் மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களை மின்னணு மயமாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக விளங்குகிறது திரிபுரா.

அங்கு 2023-ஆம் ஆண்டு முதல் E-OFFICE திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களைக் காணவில்லை என்று கூறி மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளும் காணாமல் போய்விட்டார்கள்.

அதாவது தங்களது பணியைச் சரிவரச் செய்யாமல் ஏமாற்றிய அலுவலர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை ஏராளமான அலுவலகங்கள் டிஜிட்டல் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்மயமாக்கி மலைக்க வைக்கிறது திரிபுரா. எஞ்சியிருக்கும் லட்சக்கணக்கான ஆவணங்களை E FILE-ஆக மாற்றும் பெரும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அமைச்சரவை கூட்டம், ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றைக் காகிதமே இல்லாமல் ONLINE-ல் நடத்துகிறார். இணையப் பாதுகாப்பை உறுதி செய்து E GOVERMENT RACE-ல் முந்திக் கொண்டிருக்கிறது திரிபுரா.

Tags: E-OFFICEIndiaE-OFFICE - Tripura aheadதிரிபுராE CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹாமுதலமைச்சர் மாணிக் சாஹா
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

Next Post

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies