E-OFFICE - முந்தும் திரிபுரா!
Mar 15, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

E-OFFICE – முந்தும் திரிபுரா!

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு அரசு அலுவலகங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருந்தன என்பது கடந்த தலைமுறைக்குத் தெரியும். கட்டுக்கட்டாக கோப்புகள்… மேசைக்கு மேசை FILE-கள்… என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதிலும் பழைய RECORDS-ஐ தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் டிஜிட்டல் புரட்சிக்குப் பிறகு உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

நாளுக்குநாள் மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களை மின்னணு மயமாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக விளங்குகிறது திரிபுரா.

அங்கு 2023-ஆம் ஆண்டு முதல் E-OFFICE திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களைக் காணவில்லை என்று கூறி மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளும் காணாமல் போய்விட்டார்கள்.

அதாவது தங்களது பணியைச் சரிவரச் செய்யாமல் ஏமாற்றிய அலுவலர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை ஏராளமான அலுவலகங்கள் டிஜிட்டல் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்மயமாக்கி மலைக்க வைக்கிறது திரிபுரா. எஞ்சியிருக்கும் லட்சக்கணக்கான ஆவணங்களை E FILE-ஆக மாற்றும் பெரும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அமைச்சரவை கூட்டம், ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றைக் காகிதமே இல்லாமல் ONLINE-ல் நடத்துகிறார். இணையப் பாதுகாப்பை உறுதி செய்து E GOVERMENT RACE-ல் முந்திக் கொண்டிருக்கிறது திரிபுரா.

Tags: E-OFFICEIndiaE-OFFICE - Tripura aheadதிரிபுராE CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹாமுதலமைச்சர் மாணிக் சாஹா
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

Next Post

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies