அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!
Sep 1, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசுப் பள்ளியில் பயின்று குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சி பி ராதாகிருஷ்ணனின் மறுபக்கத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் சந்திராபுரத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பொன்னுச்சாமி – ஜானகி அம்மாளுக்கு பிறந்தவர் தான் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன். அரண்மனை புதூர் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் தனது ஆரம்பக் கால கல்வியைப் பயின்று சி.பி. ராதாகிருஷ்ணன் சிறுவயதிலிருந்தே தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்துள்ளார்.

தங்களுடன் அருகில் அமர்ந்து கல்வி பயின்ற நண்பர் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவது அளவில்லா மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவிக்கின்றனர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆரம்பக் கால நண்பர்கள்.

கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னுடைய மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அப்பள்ளியின் முதன்மை மாணவராக வலம் வந்திருக்கிறார்.

அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்ற போது மாணவர் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெய்வ பக்தி மிகுந்த, மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய மாணவராகவே திகழ்ந்ததாகவும் சக பள்ளி தோழர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன் படிப்பு மற்றும் அரசியலில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வ மிக்கவராக இருந்தார். கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிரிக்கெட் மீதும் அளப்பரிய ஆர்வம் இருந்திருக்கிறது. இந்திய குடியரசுத் துணை தலைவராகத் தேர்வாக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தங்களின் பள்ளியில் பயின்றவர் என்பதிலேயே பெருமையாக இருக்கிறது என்கின்றனர் தற்போதைய பள்ளி நிர்வாகிகள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேவராக தனது பயணத்தைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன், ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், 1998 மற்றும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர், 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவர், பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன்  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது உடன் படித்த நண்பர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பெருமை தரக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது.

Tags: cp radhakarishnanGovernment School TO VP of India: C.P. Radhakrishnanwho will make Tamil Nadu proudதமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

Next Post

E-OFFICE – முந்தும் திரிபுரா!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies