இந்தியப் பங்குச்சந்தை இன்று உயர்வுடன் நிறைவடைந்தது.
அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 370 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரத்து 644 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 980 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.