சென்னை வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கம் ஒத்தவாடி தெருவில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை என இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான காவல்துறை தரப்பு, சிலை வைக்க அனுமதி கோரும் இடம் மிகவும் குறுகலானது எனத் தெரிவித்தது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.