தஞ்சை : படுகொலை வழக்கு - 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!
Oct 6, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில், பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல், பேகம்பூர் பூச்சி நாயக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்துல்லா வீட்டில் தேசியப் புலனாய்வு முகமையின் டிஎஸ்பி சுதர்சன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடையாள அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.மேலும் வரும் 25 ஆம் தேதி என்.ஐ.ஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் யூசிப் என்பவரது இல்லத்திலும், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலையரங்கம் பகுதியில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடை உள்ளிட்ட 5 இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் செல்போன் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் புதுமனை தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் முகமது அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிலிருந்தவர் எனக் கூறப்படுகிறது.

Tags: Thanjavur: Murder case - NIA officials raid 8 places8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைபடுகொலை வழக்கு
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Next Post

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Related News

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies