பேரிடர் மேலாண்மை - முன்னேறும் மகாராஷ்டிரா!
Oct 6, 2025, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையைத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஆண்டுதோறும் மகாராஷ்டிரா மாநிலம் பெருமழையைச் சந்திப்பது வாடிக்கை. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவார்கள். பேருந்து, ரயில், விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்கான முன்மொழிவை முன்னெடுத்திருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மாநில அளவில் அவசரக்கால செயல்பாட்டு மையம் தொடக்கம், மாவட்டங்களில் உள்ள EMERGENCY OPERATION CENTER-களை நவீனப்படுத்துதல், பேரிடர் மேலாண்மையைக் கற்றுக்கொடுக்கத் தனி கல்வி நிறுவனத்தைத் தொடங்குதல் என மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகள் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பேரிடர் மேலாண்மைக்கு வழிகோலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்கிறார்கள் வல்லுநர்கள்.

DISASTER MANAGEMENT-க்கென தனி இணையதளமும் ‘AAPATTI SAHAYAK’ என்னும் அலைப்பேசி செயலியும் தொடங்கப்பட்டுள்ளன. அவசரக்கால செயல்பாட்டு மையம் நவீனப்படுத்தப்படுவதை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்பாட்டின் தொடக்கம் இது. விதிகளுக்கு உட்பட்டு உலகத் தரத்துக்கு இணையாக அவசரக்கால செயல்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களைப் பெறுவதற்கும் கடத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் STATE EMERGENCY OPERATION CENTER-ல் உள்ளன.

அதிக செயல்திறன் கொண்ட கணினிகள், காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி, ஏராளமான தகவல்களைச் சேமித்து வைக்கும் SERVER-கள், SATELLITE PHONE, WIRELESS கருவிகள், செயற்கைக்கோள் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் புவியைக் கண்காணிக்கும் வசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் பாதிப்புகளை நிகழ் நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும்.

பேரிடர் காலத்தின் போது மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவதற்காக ‘AAPATTI SAHAYAK’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உதவி தேவைப்படும் மக்கள், SOS வசதியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் புகைப்படம், வீடியோ மற்றும் LOCATION-ஐயும் அனுப்பலாம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

Tags: மகாராஷ்டிராDisaster Management - Maharashtra is moving forwardபேரிடர் மேலாண்மை
ShareTweetSendShare
Previous Post

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Next Post

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies