அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!
Jan 14, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதும், தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதிது புதிதாக ராகுல்காந்தி அரங்கேற்றும் நாடகங்கள் ஒவ்வொருமுறையும் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது. வழக்கமான ஜனநாயக நடைமுறையைக் கூட அறிந்திருக்காமல் மூர்க்கத் தனமாக ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் குறித்தும் அதன் உண்மை நிலவரம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத காங்கிரஸ், பாஜக வெற்றி பெறும் இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை எழுப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திர குற்றச்சாட்டு எடுபடாத நிலையில், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் ஓட்டுத் திருட்டு நடைபெறுவதாக புதிய பிரச்சாரத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான காலகட்டத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் நடைமுறை வழக்கமானது என்பதைக் கூட தெரிந்திருக்காத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் 4 சதவிகிதம் வாக்குகள் எப்படி அதிகரிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதே மகாராஷ்டிராவில் கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதும் இதே 4 சதவிகிதம் வாக்காளர்கள் அதிகரித்திருந்ததைக் கண்டு கொள்ளாத காங்கிரஸ் தற்போது பாஜக வெற்றி பெற்ற போது மட்டும் புகார்களை எழுப்புவது உள்நோக்கம் கொண்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானபோதோ, அதற்கும் சில மாதங்கள் கழித்தோ எந்தவித புகாரையும் அளிக்காத காங்கிரஸ், எட்டு மாதங்கள் கழித்துத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.  தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல்காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகள் சர்ச்சையானது என்பதோடு மட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட என்ற விவாதம் எழத் தொடங்கியுள்ளது. உண்மைகளை மறைப்பதோடு, சட்டத்தையும் தவறாகச் சித்தரிக்கப் பார்க்கும் ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிராவை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தானே வாக்காளர் தயாரிக்கப்பட்டது என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய அம்மாநில அமைச்சர் ராஜண்ணா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை வழங்குங்கள், இல்லையெனில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடுங்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் ராகுல்காந்தி பதற்றமடைந்துள்ளார். காங்கிரஸ் தோல்வி பெறும் போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதுப்புது பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ராகுல் காந்தி, அதே காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தும் பணி குறித்து தற்போதுவரை காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்காத நிலையில், தோல்வி பயத்தில் புதுப்புது குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி எழுப்பி வருகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கும் ராகுல்காந்திக்கு, அடுத்தடுத்த மாநிலங்களில் நடைபெறும் திருத்தப் பணிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: அம்பலமான ராகுலின் போலி முகம்rahul gandhiCongressNEWS TODAYcongress news todayRahul's fake face exposed: Everything he says is a lieeverything he touches is a failure
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies