சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்கா இதுவரை அதிகப்படியான வரி எதுவும் விதிக்கவில்லை. இதற்கு அமெரிக்கா கூறும் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீதம் வரி வித்துள்ளார். ரஷ்யாவுடனான வர்த்தக உறவுதான் உண்மையிலேயே பிரச்சனை என்றால், சீனாவுக்குத்தான் அவர் அதிக வரி விதித்திருக்க வேண்டும். காரணம், இந்தியாவைக் காட்டிலும் சீனாதான் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கி வருகிறது.

ஆனால், சீனா மீது தொடர்ந்து கரிசனத்துடன் நடந்து வரும் ட்ரம்ப், இந்தியாவுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து வாள் சுழற்றி வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் தெளிவை ஏற்படுத்தாமல், குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் பேட்டியளித்த அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதனை இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்வதாகக் கூறினார். இதன் மூலம் இந்தியா ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டுவதாகவும், இந்தியாவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

அதாவது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, அதனை வேறு இடங்களில் இந்தியா விற்பதுதான் அமெரிக்காவுக்கு பிரச்சனை எனக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகிறார். ஆனால், இதனையேதான் சீனாவும் செய்து வருகிறது. இருந்தபோதிலும் சீனா மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைச் சீனா சுத்திகரித்து ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும்,  சீனாவுக்கு அதிக வரி விதித்தால் ஐரோப்பிய நாடுகளை அந்த வரி விதிப்பு பாதிக்கும் எனவும் தெரிவித்தார். இதனால்தான், சீனாவுக்கு அதிக வரி விதிக்கப்படவில்லை என, ஒரு வினோதமான விளக்கத்தை அவர் அளித்தார்.

இது ஏற்கனவே உள்ள குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. சீனாவும், இந்தியாவும் ஒரே செயலைதான் செய்கின்றன. அப்படியென்றால் இருநாடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும். வரி விதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இரு நாடுகளுக்கும் வரி விதிக்கக் கூடாது. மாறாக, சீனாவுக்கு ஒரு நியாயத்தையும், இந்தியாவுக்கு ஒரு நியாயத்தையும் அமெரிக்கா கூறி வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை, முந்தைய பைடன் அரசு ஊக்குவித்தது. அதனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவு சுமுகமாக இருந்து வந்தது. ஆனால்,  அந்த சுமுக உறவை சீர்கெடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை எல்லாம்  ட்ரம்ப் அரசு தற்போது செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: usaஅமெரிக்காOne justice for Chinaone justice for India: America's double standardஅமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா
ShareTweetSendShare
Previous Post

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies