பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்துள்ளார். இந்தியா – பிரான்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகவும் கூறியுள்ளார்.