புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 24, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாவது உலகப்போருக்கு பிறகு இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரஷ்ய அதிபர் புதின் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக ரஷ்யா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் புதினிடம், உக்ரைன் போர் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததாகவும், துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் பற்றியும் தெரிவித்ததாகவும் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் உடனான வர்த்தக மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லாவ்ரோவ் உடனான தனது சந்திப்பு அரசியல் உறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டையும் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் முக்கிய உறவுகளில் ஒன்றாக இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு நிலையானதாக உள்ளதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த உறவு மேம்படுவதற்கு வசதியாக, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை, மாறிவரும் பொருளாதார மற்றும் வர்த்தக சூழல் அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறிய ஜெய்சங்கர், சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான், ரஷ்ய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் கொள்முதல் செய்கின்றன என்று விளக்கமளித்தார்.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிர்த்து ஒன்றாக போராட இருநாடுகளும் முடிவு செய்திருப்பதாகவும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும் குறிப்பாக, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உறுதி எடுத்திருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாக கூறிய ஜெய்சங்கர், பிரிக்ஸ் ,ஜி-20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பு வலுவானதாகவும், எதிர்கால இலக்குகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்துக்கு இணைந்து செயலாற்ற இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.

வரி அல்லாத தடைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வது, மருந்துகள், விவசாயம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவது, எரிசக்தி துறையில் ஒன்றிணைந்து செயல்படுவது, என இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags: President PutinWorld War II.India-Russia relationshiprussia exportsIndiarussiaTrumpExternal Affairs Minister S Jaishankar
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

Next Post

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies