புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் - சிறப்பு கட்டுரை!
Aug 24, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Aug 24, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாவது உலகப்போருக்கு பிறகு இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரஷ்ய அதிபர் புதின் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக ரஷ்யா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் புதினிடம், உக்ரைன் போர் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததாகவும், துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் பற்றியும் தெரிவித்ததாகவும் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் உடனான வர்த்தக மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லாவ்ரோவ் உடனான தனது சந்திப்பு அரசியல் உறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டையும் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் முக்கிய உறவுகளில் ஒன்றாக இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு நிலையானதாக உள்ளதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த உறவு மேம்படுவதற்கு வசதியாக, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை, மாறிவரும் பொருளாதார மற்றும் வர்த்தக சூழல் அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறிய ஜெய்சங்கர், சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான், ரஷ்ய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் கொள்முதல் செய்கின்றன என்று விளக்கமளித்தார்.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிர்த்து ஒன்றாக போராட இருநாடுகளும் முடிவு செய்திருப்பதாகவும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும் குறிப்பாக, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உறுதி எடுத்திருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாக கூறிய ஜெய்சங்கர், பிரிக்ஸ் ,ஜி-20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பு வலுவானதாகவும், எதிர்கால இலக்குகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்துக்கு இணைந்து செயலாற்ற இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.

வரி அல்லாத தடைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வது, மருந்துகள், விவசாயம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவது, எரிசக்தி துறையில் ஒன்றிணைந்து செயல்படுவது, என இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags: IndiarussiaTrumpExternal Affairs Minister S JaishankarPresident PutinWorld War II.India-Russia relationshiprussia exports
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

Next Post

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Related News

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies