தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே போனது எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உடுமன் பாறை பகுதியில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார். அதில், வால்பாறையில் உள்ள உடுமன்பாறை கிராமம், மாநிலத்தின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாகத் திமுக அரசு கூறி வருகிறது என விமர்சித்துள்ள அவர், சாலைவசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முதியவரைக் கிராம மக்கள் தொட்டில் கட்டி அழைத்துச் செல்வது இதயத்தை உடைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த 2 ஆயிரத்து 43 கோடி ரூபாய் எங்கே போனது எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.