சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி
Oct 10, 2025, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Aug 25, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் சிதிவேனி லிகமமடா ரபுகாவை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2014ல் பிஜிக்கு விஜயம் செய்தபோது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் உருவாக்கப்பட்டதாகவும், இந்த முயற்சி இந்தியா-பிஜி உறவுகளை மட்டுமல்ல, முழு பசிபிக் பிராந்தியத்துடனான உறவை வலுப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை மூலம், இருநாடுகளின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்துள்ளதாகவும் கூறினார். பிஜியின் சுவா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்ட இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்கள் பிஜிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பிஜியின் திறன்களை மேம்படுத்த இந்தியா உதவி புரியும் எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிஜி பிரதமர்ச் சிதிவேனி ரபுகா மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்ப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அப்போது, பிஜி பிரதமருக்குக் காந்தியின் மார்பளவு சிலைப் பரிசாக வழங்கப்பட்டது.

Tags: பிரதமர் மோடிpm modi news todayBoth countries support a freesecure and prosperous Indo-Pacific region: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனை!

Next Post

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies