சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி
Mar 15, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் சிதிவேனி லிகமமடா ரபுகாவை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2014ல் பிஜிக்கு விஜயம் செய்தபோது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் உருவாக்கப்பட்டதாகவும், இந்த முயற்சி இந்தியா-பிஜி உறவுகளை மட்டுமல்ல, முழு பசிபிக் பிராந்தியத்துடனான உறவை வலுப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை மூலம், இருநாடுகளின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்துள்ளதாகவும் கூறினார். பிஜியின் சுவா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்ட இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்கள் பிஜிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பிஜியின் திறன்களை மேம்படுத்த இந்தியா உதவி புரியும் எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிஜி பிரதமர்ச் சிதிவேனி ரபுகா மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்ப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அப்போது, பிஜி பிரதமருக்குக் காந்தியின் மார்பளவு சிலைப் பரிசாக வழங்கப்பட்டது.

Tags: பிரதமர் மோடிpm modi news todayBoth countries support a freesecure and prosperous Indo-Pacific region: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனை!

Next Post

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies