சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் சிதிவேனி லிகமமடா ரபுகாவை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2014ல் பிஜிக்கு விஜயம் செய்தபோது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் உருவாக்கப்பட்டதாகவும், இந்த முயற்சி இந்தியா-பிஜி உறவுகளை மட்டுமல்ல, முழு பசிபிக் பிராந்தியத்துடனான உறவை வலுப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை மூலம், இருநாடுகளின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்துள்ளதாகவும் கூறினார். பிஜியின் சுவா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்ட இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்கள் பிஜிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பிஜியின் திறன்களை மேம்படுத்த இந்தியா உதவி புரியும் எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிஜி பிரதமர்ச் சிதிவேனி ரபுகா மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்ப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அப்போது, பிஜி பிரதமருக்குக் காந்தியின் மார்பளவு சிலைப் பரிசாக வழங்கப்பட்டது.

Tags: பிரதமர் மோடிpm modi news todayBoth countries support a freesecure and prosperous Indo-Pacific region: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனை!

Next Post

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies