கிட்னி திருட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 26, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது கிட்னி திருட்டு விவகாரத்தில் காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், சிபிசிஐடி-யின் காவல்துறை துணைத் தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு குறிப்பிட்டு வழக்கை சிறிதுநேரம் ஒத்தி வைத்தனர்.

மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரக சுகாதார சேவைகளின் இயக்குனர் புகார் அளித்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து,தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த புலனாய்வு குழு, நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 24-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: special investigation teamMadurai bench of the High Courtkidney theft case.Southern Zone Police Chief Premanand Sinha
ShareTweetSendShare
Previous Post

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Next Post

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

Related News

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் – சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக புகார்!

விநாயகர் சதுர்த்தி விழா – பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி – காவல்துறை தகவல்!

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies