கிட்னி திருட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது கிட்னி திருட்டு விவகாரத்தில் காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், சிபிசிஐடி-யின் காவல்துறை துணைத் தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு குறிப்பிட்டு வழக்கை சிறிதுநேரம் ஒத்தி வைத்தனர்.

மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரக சுகாதார சேவைகளின் இயக்குனர் புகார் அளித்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து,தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த புலனாய்வு குழு, நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 24-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: special investigation teamMadurai bench of the High Courtkidney theft case.Southern Zone Police Chief Premanand Sinha
ShareTweetSendShare
Previous Post

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Next Post

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies