கிட்னி திருட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
Apr 29, 2026, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது கிட்னி திருட்டு விவகாரத்தில் காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், சிபிசிஐடி-யின் காவல்துறை துணைத் தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு குறிப்பிட்டு வழக்கை சிறிதுநேரம் ஒத்தி வைத்தனர்.

மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரக சுகாதார சேவைகளின் இயக்குனர் புகார் அளித்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து,தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த புலனாய்வு குழு, நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 24-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: special investigation teamMadurai bench of the High Courtkidney theft case.Southern Zone Police Chief Premanand Sinha
ShareTweetSendShare
Previous Post

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Next Post

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies