தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து - 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!
Aug 26, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து – 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சாலை விபத்தை ஏற்படுத்தி 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்ச் சிங்கிற்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 28 வயதேயான அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இந்தியாவில் உள்ள அவரது கிராமமே கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டியில் அண்மையில் நடந்த சாலை விபத்து, காரில் பயணம் செய்த 3 பேரின் உயிரைக் குடித்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங், நீளமான டிரக்கைச் சாலையில் திருப்ப முயற்சித்தபோது, அதிவேகத்தில் வந்த கார், டிரக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார்ச் சுக்குநூறாக நொறுங்கிச் சிதைந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பிட்ட சாலையில் வாகனத்தைத் திருப்புவது குற்ற செயல் என்று அமெரிக்கச் சட்டம் சொல்கிறது.

அப்படியிருந்தும் தடைச் செய்யப்பட்ட சாலையில், ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங் தடையை மீறி டிரக்கைத் திருப்பியதே விபத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

அமெரிக்கச் சாலைகளில் கனரக லாரிகளை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அமெரிக்க லாரி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் குறைத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு கொடிய விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர் ஹர்ஜிந்தர்ச் சிங்கின் குடும்பத்தினரும் முழு கிராமமும் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும், அமெரிக்கா கருணைக் காட்ட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் டர்ன்தரன் மாவட்டத்தில் உள்ள ரடௌல் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்சிங்கிற்கு ஆதரவாக இணையதளத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.  அதில் அவருக்கு 28 வயதுதான், விபத்து அவருடைய துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளனர்.

ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிட ஆலோசகர் வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும் என ஷிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரக் கவுர் பாதல் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் லாரி தொழிலில் 20 சதவிகிதப் பஞ்சாபி மற்றும் சீக்கிய ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் ஒன்றரை லட்சம் சீக்கிய ஓட்டுநர்களைப் பாதிக்கும் என்றும் அவர்க் கூறியுள்ளார்.

மேலும், ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிடுவதற்கு, அவருக்கு ஆலோசகர் அணுகல் வழங்கப்படுவதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விபத்து சம்பவத்தால், வெளிநாட்டு லாரி ஓட்டுநர்களின் பணி விசாக்களை அமெரிக்கா முடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: ஃபுளோரிடா விபத்துடிரக்usaஅமெரிக்காகார்Village demands reduction in sentence: Florida accident could result in 45 years in prison
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Related News

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா குடியிருப்பு பகுதியை முற்றிலும் தகர்த்த இஸ்ரேல் ராணுவம்!

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு!

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies