தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து - 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!
Oct 11, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து – 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சாலை விபத்தை ஏற்படுத்தி 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்ச் சிங்கிற்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 28 வயதேயான அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இந்தியாவில் உள்ள அவரது கிராமமே கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டியில் அண்மையில் நடந்த சாலை விபத்து, காரில் பயணம் செய்த 3 பேரின் உயிரைக் குடித்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங், நீளமான டிரக்கைச் சாலையில் திருப்ப முயற்சித்தபோது, அதிவேகத்தில் வந்த கார், டிரக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார்ச் சுக்குநூறாக நொறுங்கிச் சிதைந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பிட்ட சாலையில் வாகனத்தைத் திருப்புவது குற்ற செயல் என்று அமெரிக்கச் சட்டம் சொல்கிறது.

அப்படியிருந்தும் தடைச் செய்யப்பட்ட சாலையில், ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங் தடையை மீறி டிரக்கைத் திருப்பியதே விபத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

அமெரிக்கச் சாலைகளில் கனரக லாரிகளை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அமெரிக்க லாரி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் குறைத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு கொடிய விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர் ஹர்ஜிந்தர்ச் சிங்கின் குடும்பத்தினரும் முழு கிராமமும் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும், அமெரிக்கா கருணைக் காட்ட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் டர்ன்தரன் மாவட்டத்தில் உள்ள ரடௌல் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்சிங்கிற்கு ஆதரவாக இணையதளத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.  அதில் அவருக்கு 28 வயதுதான், விபத்து அவருடைய துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளனர்.

ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிட ஆலோசகர் வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும் என ஷிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரக் கவுர் பாதல் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் லாரி தொழிலில் 20 சதவிகிதப் பஞ்சாபி மற்றும் சீக்கிய ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் ஒன்றரை லட்சம் சீக்கிய ஓட்டுநர்களைப் பாதிக்கும் என்றும் அவர்க் கூறியுள்ளார்.

மேலும், ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிடுவதற்கு, அவருக்கு ஆலோசகர் அணுகல் வழங்கப்படுவதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விபத்து சம்பவத்தால், வெளிநாட்டு லாரி ஓட்டுநர்களின் பணி விசாக்களை அமெரிக்கா முடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: usaஅமெரிக்காகார்Village demands reduction in sentence: Florida accident could result in 45 years in prisonஃபுளோரிடா விபத்துடிரக்
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சீனா : பரதநாட்டியம் ஆடி அசத்திய 17 வயது சீன மாணவி!

Related News

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies