விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!
Oct 22, 2025, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர்ச் சதூர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் சென்னையில் கொண்டாடப்படும் விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. சென்னையில் வீடுகள் மட்டுமல்லாது தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர்ச் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதே விநாயகர்ச் சதூர்த்திக்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகச் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சென்னைக் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் ஆகிய எளிதில் கரையக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நடப்பாண்டு வரவேற்பு அதிகரித்துள்ளது.

மண்ணில் இருந்து சிலையை உருவாக்கி, அதனை உலர வைத்து, பளபளக்கும் வண்ணங்கள் அடித்து, கண்களுக்கு உயிரூட்டும் வரையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுணுக்கமான ஆபரணங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், கையால் வடிவமைக்கப்பட்ட முக பாவனைகள் எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு சிலைகளையும் தன்னுடைய கைக்குழந்தைகளைப் போல தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து விதமான சிலைகளின் விற்பனையும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரில் எளிதில் கரையக்கூடிய எக்கோ பிரண்ட்லி சிலைகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, பக்தி, வியாபாரம் ஆகிய மூன்றையும் இணைந்து உருவாக்கும் இந்த விநாயகர்ச் சதூர்த்தி, பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் சிலைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் நகரமயமாதலின் காரணமாக விநாயகர்ச் சிலைகளை தயாரித்துப் பாதுகாப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத நிலையில், அதற்கெனத் தனி இடத்தை அரசே ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கைச் சிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Ganesha Chaturthi celebration: People are eager to buy colorful idolsHolidayவிநாயகர் சதுர்த்திவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி பண்டிகை
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

Next Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies