எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதத்துடன் விடுவித்தது.
கடந்த 9 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 7 மீனவர்களும் மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 6 மீனவர்களுக்குத் தலா 87 ஆயிரம் ரூபாய் அபராதமும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு மீனவருக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விடுவித்தார்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுக்கான விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.