மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் - புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த இளைஞர் ஒருவர், எலான் மஸ்கின் நிறுவனத்தின் உதவியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒருபுறம் மனித மூளை அளப்பரிய ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது. மறுபுறம் கணினி ஒட்டுமொத்த உலகையே கட்டுப்படுத்தும் இடம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரு ஆற்றல்களையும் ஒன்றிணைத்தால் மனிதகுலம் மேலும் பல உயரங்களை எட்டும் என நம்புகிறார் எலான் மஸ்க்.

இது குறித்து ஆய்வு செய்ய அவர்த் தொடங்கிய நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளைச் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மனித மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி, கணினியுடன் இணைப்பது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொடக்கத்தில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை, பின்னர் மனிதர்களிடமும் நடத்தப்பட்டது. தற்போது அந்நிறுவனம் தனது ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் வெற்றிக்கரமாகக் கணினியின் சிப்பைப் பொருத்திய நியூராலிங்க், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

2016ம் ஆண்டு நோலண்ட் அர்பாக் என்ற இளைஞர் நீச்சல் பயிற்சியின்போது கீழே தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது தோள்பட்டைக்குக் கீழே உடல் செயலிழந்தது. இதனால், படுத்த படுக்கையான அவர், எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அவரது மூளையில் நியூராலிங் சிப் பொருத்தப்பட்டது.

கடந்த 18 மாதங்களாகச் சிப்புடன் வாழ்ந்து வரும் அந்த இளைஞர், தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னால் இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்து பல்வேறு சேனல்களைப் பார்க்க முடிவதாகவும், ஏசியை ஆன் செய்ய முடிவதாகவும், கணிப்பொறியில் வீடியோ கேம் கூட விளையாட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சைக்கு பின், தன்னால் நிறைய விஷயங்களைச் சுயமாக செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், தனது வாழ்க்கையே தற்போது வேறு விதமாக மாறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தச் சிகிச்சையை செய்துகொண்ட முதல் நபர் என்பதில் பெருமையடைவதாகவும், தற்போது தன்னால் 10 மணி நேரம் வரைக் கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உள்ளதாகத் தெரிவிக்கிறார் நோலண்ட் அர்பாக். நியூராலிங்கின் இந்த ஆய்வுகள் தொடர் வெற்றிகளைப் பெற்றால், விபத்துகளில் உடல் செயலிழப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு அது ஒரு வரபிரசாதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Tags: மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப்elonmuskComputer chip implanted in the brain - Elon Musk's company sets new recordபுதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

மாயாஜால சுழலின் மாமன்னன்!

Next Post

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies