மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் - புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!
Mar 15, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த இளைஞர் ஒருவர், எலான் மஸ்கின் நிறுவனத்தின் உதவியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒருபுறம் மனித மூளை அளப்பரிய ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது. மறுபுறம் கணினி ஒட்டுமொத்த உலகையே கட்டுப்படுத்தும் இடம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரு ஆற்றல்களையும் ஒன்றிணைத்தால் மனிதகுலம் மேலும் பல உயரங்களை எட்டும் என நம்புகிறார் எலான் மஸ்க்.

இது குறித்து ஆய்வு செய்ய அவர்த் தொடங்கிய நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளைச் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மனித மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி, கணினியுடன் இணைப்பது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொடக்கத்தில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை, பின்னர் மனிதர்களிடமும் நடத்தப்பட்டது. தற்போது அந்நிறுவனம் தனது ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் வெற்றிக்கரமாகக் கணினியின் சிப்பைப் பொருத்திய நியூராலிங்க், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

2016ம் ஆண்டு நோலண்ட் அர்பாக் என்ற இளைஞர் நீச்சல் பயிற்சியின்போது கீழே தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது தோள்பட்டைக்குக் கீழே உடல் செயலிழந்தது. இதனால், படுத்த படுக்கையான அவர், எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அவரது மூளையில் நியூராலிங் சிப் பொருத்தப்பட்டது.

கடந்த 18 மாதங்களாகச் சிப்புடன் வாழ்ந்து வரும் அந்த இளைஞர், தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னால் இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்து பல்வேறு சேனல்களைப் பார்க்க முடிவதாகவும், ஏசியை ஆன் செய்ய முடிவதாகவும், கணிப்பொறியில் வீடியோ கேம் கூட விளையாட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சைக்கு பின், தன்னால் நிறைய விஷயங்களைச் சுயமாக செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், தனது வாழ்க்கையே தற்போது வேறு விதமாக மாறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தச் சிகிச்சையை செய்துகொண்ட முதல் நபர் என்பதில் பெருமையடைவதாகவும், தற்போது தன்னால் 10 மணி நேரம் வரைக் கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உள்ளதாகத் தெரிவிக்கிறார் நோலண்ட் அர்பாக். நியூராலிங்கின் இந்த ஆய்வுகள் தொடர் வெற்றிகளைப் பெற்றால், விபத்துகளில் உடல் செயலிழப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு அது ஒரு வரபிரசாதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Tags: மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப்elonmuskComputer chip implanted in the brain - Elon Musk's company sets new recordபுதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

மாயாஜால சுழலின் மாமன்னன்!

Next Post

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies