"நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்" - எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா என்ன அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உக்ரைனையும், ரஷ்யாவைச் சமாதானம் செய்துவைக்கிறேன் என்ற பெயரில், பல்வேறு நாடுகளிடம் வம்பிழுத்து, பகைமைப் பாராட்டி வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்படும் எனக் கூறிய அவர், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரி விதித்தார். அந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

உலகளவில் பிரேசிலுக்கும், இந்தியாவுக்கும் மட்டும்தான் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கெடுபிடிகளுக்கு எல்லாம் இந்தியா அசைந்து கொடுப்பதாக இல்லை. ரஷ்யா மட்டுமல்ல, குறைந்த விலைக்கு யார்க் கச்சா எண்ணெய் கொடுத்தாலும் நாங்கள் வாங்குவோம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களுக்குத் தங்குதடையின்றி எண்ணெய் விநியோகம் செய்வது மட்டும்தான் தங்களின் நோக்கம் எனவும் தெளிவுபடுத்திவிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தப்போவதில்லை என, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது தெரிவித்துள்ளன. இது குறித்து தனியார் நாளிதழுக்குப் பேட்டியளித்த அதன் அதிகாரிகள், தங்களுக்கு முதலில் நாடுதான் முக்கியம் எனவும், வர்த்தகம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் எனவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு வலுவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தும்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இது குறித்து பேசிய நிர்வாகிகள், கடந்தாண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்-க்கு இரண்டரை முதல் 3 டாலர்கள் வரை ரஷ்யா தள்ளுபடி அளித்திருந்ததாகவும், அது தற்போது ஒன்றரை டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே தங்களுக்கான ஆர்டர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கும் என நம்புவதாகவும் கூறினர். தற்காலிகமான பொருளாதாரச் சிரமங்களை காட்டிலும், அரசின் நடவடிக்கைக்குத் துணை நிற்பதே முக்கியம் எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர்ப் பியூஷ் கோயல் உள்ளிட்டோர், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படி இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்று வருகின்றன.

Tags: trade is secondary" - Oil refining companies are categoricalRussia oilIndiausa"The country is important
Share
Tweet
SendShare
Previous Post

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Next Post

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies