மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பால்கர் கட்டட விபத்து மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துடன் தனது எண்ணங்கள் இருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
















