கேரள மாநிலத்தில் கிணற்றில் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர்க் கிணற்றின் ஒரு பகுதியை இடித்துச் சாய்வு பாதை அமைத்தால் தான், யானையை மீட்க முடியும் எனத் தெரிவித்தனர்.
ஆனால் உரிமையாளர்க் கிணற்றின் பக்கவாட்டு சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் சாய்வு பாதை அமைத்து யானையை வனத்துறையினர்ப் பத்திரமாக மீட்டனர்.