சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!
Oct 22, 2025, 03:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில், நாட்டிலேயே மிகப்பெரிய Aero engine test bed-ஐ ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Raphe mPhibr தயாரித்துள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக மாறும் என்று தெரிவித்தார்.

பொதுவான விமானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது, Tejas, ரஃபேல் போன்ற போர் வமானங்கள் நம் நினைவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத்துறையில் மாறிவரும் சக்திகளாக ட்ரோன்கள் உருவெடுத்திருப்பதாகக் கூறினார்.

இன்றைய இளைஞர்கள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் புதிய சிந்தனையை, புதிய பாதையை உருவாக்குவதாக அவர்க் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும்போது, அமெரிக்காவோ, சீனாவோ அவற்றைக் கண்டறிய முடியாது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.

போர்க் கொள்கையில் ட்ரோன்களை இணைப்பது அவசியமானது என்றும், நவீனப் போர் உத்திக்கும் ட்ரோன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார்ப் பாரத் திட்டத்தின் கண்ணோட்டத்தில் தனியார்  பங்களிப்புடன் உருவாக்கப்படும் ட்ரோன்கள், தனது வலிமையைப் பிரதிபலித்து வருவதாகவும் கூறினார்.

ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ஆரம்ப காலத்தில் அவைக் கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஷ்யா, உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், அவற்றை நமது போர்க் கொள்கையில் இணைப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த ‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பலரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. எனவேதான் ட்ரோன்கள் அடுத்த தலைமுறை ஆயுதம் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: அமெரிக்காசீனாIndian drones pose a challenge: Even America and China can't predict themசவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள்Indiadrdotoday newscentral minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

Next Post

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies