சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில், நாட்டிலேயே மிகப்பெரிய Aero engine test bed-ஐ ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Raphe mPhibr தயாரித்துள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக மாறும் என்று தெரிவித்தார்.

பொதுவான விமானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது, Tejas, ரஃபேல் போன்ற போர் வமானங்கள் நம் நினைவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத்துறையில் மாறிவரும் சக்திகளாக ட்ரோன்கள் உருவெடுத்திருப்பதாகக் கூறினார்.

இன்றைய இளைஞர்கள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் புதிய சிந்தனையை, புதிய பாதையை உருவாக்குவதாக அவர்க் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும்போது, அமெரிக்காவோ, சீனாவோ அவற்றைக் கண்டறிய முடியாது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.

போர்க் கொள்கையில் ட்ரோன்களை இணைப்பது அவசியமானது என்றும், நவீனப் போர் உத்திக்கும் ட்ரோன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார்ப் பாரத் திட்டத்தின் கண்ணோட்டத்தில் தனியார்  பங்களிப்புடன் உருவாக்கப்படும் ட்ரோன்கள், தனது வலிமையைப் பிரதிபலித்து வருவதாகவும் கூறினார்.

ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ஆரம்ப காலத்தில் அவைக் கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஷ்யா, உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், அவற்றை நமது போர்க் கொள்கையில் இணைப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த ‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பலரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. எனவேதான் ட்ரோன்கள் அடுத்த தலைமுறை ஆயுதம் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: அமெரிக்காசீனாIndian drones pose a challenge: Even America and China can't predict themசவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள்Indiadrdotoday newscentral minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

Next Post

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies