சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!
Sep 1, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில், நாட்டிலேயே மிகப்பெரிய Aero engine test bed-ஐ ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Raphe mPhibr தயாரித்துள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக மாறும் என்று தெரிவித்தார்.

பொதுவான விமானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது, Tejas, ரஃபேல் போன்ற போர் வமானங்கள் நம் நினைவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத்துறையில் மாறிவரும் சக்திகளாக ட்ரோன்கள் உருவெடுத்திருப்பதாகக் கூறினார்.

இன்றைய இளைஞர்கள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் புதிய சிந்தனையை, புதிய பாதையை உருவாக்குவதாக அவர்க் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும்போது, அமெரிக்காவோ, சீனாவோ அவற்றைக் கண்டறிய முடியாது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.

போர்க் கொள்கையில் ட்ரோன்களை இணைப்பது அவசியமானது என்றும், நவீனப் போர் உத்திக்கும் ட்ரோன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார்ப் பாரத் திட்டத்தின் கண்ணோட்டத்தில் தனியார்  பங்களிப்புடன் உருவாக்கப்படும் ட்ரோன்கள், தனது வலிமையைப் பிரதிபலித்து வருவதாகவும் கூறினார்.

ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ஆரம்ப காலத்தில் அவைக் கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஷ்யா, உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், அவற்றை நமது போர்க் கொள்கையில் இணைப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த ‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பலரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. எனவேதான் ட்ரோன்கள் அடுத்த தலைமுறை ஆயுதம் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: அமெரிக்காசீனாIndian drones pose a challenge: Even America and China can't predict themசவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள்Indiadrdotoday newscentral minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

Next Post

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Related News

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

கர்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்ட ஜித்தேந்தர் சிங் அலுவலகம்!

ஜம்மு – காஷ்மீர் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சீனாவில் உள்ளாரா அசிம் முனிர்?

தஞ்சை : காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு!

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு!

சென்னையை சேர்ந்த இளம் ரேஸரிடம் ஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்!

திண்டுக்கல் : பள்ளிக்கு சென்ற மாணவனை கடத்த முயன்ற வடமாநில நபர்!

டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது ‘வா வாத்தியார்’ படம்!

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 9.9% அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies